Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீக்குளிப்பதற்கு முன்பே ’பேஸ்புக்’கில் அறிவித்த விக்னேஷ்

தீக்குளிப்பதற்கு முன்பே ’பேஸ்புக்’கில் அறிவித்த விக்னேஷ்
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (04:05 IST)
நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷ் குமார் கட்சி பேரணியில் தீக்குளிப்பதற்கு முன்பே தனது முகநூல் பக்கத்தில் தற்கொலை போராட்டங்கள் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
 

 
காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காவிரி உரிமை மீட்பு ஊர்வலம் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன பேரணி நடத்தினர்.
 
யாரும் எதிர்பாராத விதமாக பேரணியில் திடீரென்று இளைஞர் ஒருவர் தீக்குளித்தார். அவர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலர், விக்னேஷ் குமார் என்பது தெரிய வந்தது.
 
உடனே கட்சியின் தொண்டர்கள் அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். பின்னர், காவல்துறையினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தொடர்ந்து கவலைகிடமாக இருந்து வருகிறார்.
 
webdunia

 
தீக்குளித்த விக்னேஷ், நேற்று முன் தினமே தனது 'பேஸ்புக்' பக்கத்தில், ”நாளை நடைபெறும் பேரணியில், பல தற்கொலை [பல தற்கொடை] போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஊடகங்கள் தங்கள் TRP rate ஐ உயர்த்திக்கொள்ள பேரணியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுகிறேன்.
 
அப்போவது மான தமிழ் இனம் கொதித்து எழட்டும். மாணவர் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும்” என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுப்பிரமணிய சுவாமி மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு