Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுப்பிரமணிய சுவாமி மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு

சுப்பிரமணிய சுவாமி மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (02:37 IST)
காவிரி விவகாரத்தில், இரு மாநில மக்களிடையே, மோதலை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக சுப்பிரமணிய சுவாமி மீது தேச துரோக வழக்கு தொடரக் கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 

 
சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞரான பிரவீனா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகம் ஏன் காவிரி தண்ணீருக்காக தொடர்ந்து முறையிட்டு வருகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
 
இவரது கருத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலும், இரு மாநிலங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளது.
 
ஆதலால், சுப்பிரமணியன் சுவாமி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வழக்கறிஞர் பிரவீனா கேட்டுக்கொண்டு உள்ளார்.
 
இந்த மனு மீதான நேற்று விசாரணைக்கு வந்தபோது இன்றைக்கு ஒத்தி வைத்து சேலம் தலைமை குற்றவிய நீதிபதி அன்புசெல்வி உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுரவ கொலை அச்சுறுத்தல் - காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்