Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண்ணால் வலையில் சிக்கிய வேந்தர் மூவிஸ் மதன்...

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (14:53 IST)
வேந்தர் மூவிஸ் மதன் மே மாதம் 29ஆம் தேதி, காசியில் சமாதி அடையப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானர். 


 

 
மாணவர்களிடம் மருத்துவ சீட்டிற்காக, அவர்களிடம் ரூ.70 கோடி வாங்கிவிட்டு, மோசடி செய்தவர் மதன். சென்னை, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்க்க வேந்தர் மூவிஸ் மதனிடம் பலர், பல லட்சக்கணக்கில் பல கோடி ரூபாய் கொடுத்ததை, மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
மதனை, அவரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தேடி வந்தனர். ஆனால் பல மாதமாகியும் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.  
 
இந்நிலையில் தற்போது மதன் தனிப்படை போலீஸாரால் மணிப்பூர் அருகே பிடிப்பட்டார் எனவும், மேலும் மதன் ரகசிய விசாரணையில் உள்ளார் எனவும் செய்திகள் வெளியானது.
 
ஆனால், அவர் மணிப்பூரில் கைது செய்யப்படவில்லை என்றும் திருப்பூரில் ஒரு இளம்பெண்ணை சந்திக்க சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார் என தமிழக காவல்துறை ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
மதன் சந்திக்க சென்ற பெண், சென்னையை சேர்ந்தவர் என்பதும், அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தெரிகிறது.

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments