Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண தட்டுப்பாடு பிரச்சனையிலும் ஆட்டோ டிரைவரின் நல்ல மனசு

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (14:41 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பா (25), சென்னை அடையாறில் உள்ள தனியார் புத்தக நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.


 

வேலூரில் தனியார் பள்ளிக்கு அளிக்கப்பட்ட புத்தகங்களுக்கான தொகை ரூ.35 ஆயிரத்தை வசூலித்த செல்லப்பா ஆட்டோவில், தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது பையினை ஆட்டோவில் விட்டுச் சென்றார்.

சிறிது நேரத்தில் பையை ஆட்டோவில் விட்டுச் சென்றது தெரிய வரவே, இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதற்கிடையில் இரவு காவல் நிலையத்துக்குச் சென்ற சலவன்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலா (37) தனது ஆட்டோவில் பயணம் செய்தவர் பையை தவற விட்டுச் சென்றதாகக் கூறி ஒப்படைத்தார்.

காவல்துறையினர் அந்த பையைத் திறந்து பார்த்ததில் அதில் ரூ.35 ஆயிரம் இருந்தது. இதையடுத்து செல்லப்பாவை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பணத்தை காவல் துறையினர் ஒப்படைத்தனர். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments