Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (21:52 IST)
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி உள்ளது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. 
 
இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின் 7 வருடம் கழித்து தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இனிமேல் ஆண்டு தோறும் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
 
பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இவ்வாறு இருக்கையில் பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகதான் காரணம் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு...
 
திமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிதி வேறொரு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டதால், இதுவரை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்படாமல் வைத்த நிலுவை தொகையை, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவே இந்த பேருந்துக் கட்டண உயர்வைக் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments