Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்கத் தயார்: வேல்முருகன்

அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்கத் தயார்: வேல்முருகன்
, திங்கள், 11 அக்டோபர் 2021 (21:16 IST)
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்கத் தயார் எனவும், புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்பதை நிரூபிக்க தயார் என்றும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
 
 புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய வேளாண்மை சட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
வேல்முருகனின் இந்த சவாலை ஏற்று அண்ணாமலை விவாதம் செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!