Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் காதலரைக் கொன்ற 19 வயது மகன் –வேலூரில் நடந்த கொடூரம்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (08:29 IST)
வேலூரில் தனது தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரை 19 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியை சேர்ந்த ரகு என்கிற பீடித் தொழிலாளி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  பொது இடம் ஒன்றில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கை விசாரித்து வந்த போலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரின் மகன் விஜய்யைப் போலிஸார் கைது செய்தனர்.

விஜய்யிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணங்கள் வெளிவந்துள்ளன. விஜய்யின் தாயான சங்கீதா தனது கணவரைப் பிரிந்து மகனோடு தனியாக வாழ்ந்து வருபவர். இதற்கு அவரது முறையற்ற காதல் உறவுகளேக் காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் பீடித் தொழிலாளி ரகுவோடு பழக ஆரம்பித்துள்ளார். இது ஊரில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரிய விஜய்யின் காதுபடவே பலர் இதுபற்றி பேசியுள்ளனர். இதனால் கோபமான விஜய் தன் தாயையையும் எச்சரித்தும் அவர்கள் இருவரும் கேட்கவில்லை. இதனால் கோபமான விஜய் ரகுவை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments