Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலூரில் வீடுகள் இடிந்து 9 பேர் பலி; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

வேலூரில் வீடுகள் இடிந்து 9 பேர் பலி; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (11:49 IST)
வேலூரில் வீடுகள் இடிந்து 9 பேர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் கனமழை காரணமாக 3 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்மை நீக்கம் வேண்டாம்.. தூக்கில் போடுங்க..! – பாகிஸ்தானின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு!