Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை அறிவிக்கும் முன்னரே வேலூர் வேட்பாளரை அறிவித்த திமுக மாவட்ட செயலாளர்.. பெரும் பரபரப்பு..!

Siva
வியாழன், 7 மார்ச் 2024 (14:54 IST)
திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலை வெளிப்படுத்துவதற்கு முன்னரே மாவட்ட செயலாளர் ஒருவர் வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் தான் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில் வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் என்பவர் பேசிய போது வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் தான் என்றும் இது தலைவரே என்னிடம் சொன்னார் என்றும் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே கதிர் ஆனந்துக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட செயலாளரின் இந்த முந்திரிக்கொட்டைத்தன  பேச்சால் துரைமுருகன் மற்றும் அவரது வட்டாரங்கள் கடுப்பாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
துரைமுருகனிடம் தன்னுடைய விசுவாசத்தை காட்டுவதற்கு இப்படியா பேச வேண்டும்? தலைமை அதிகாரபூர்வமாக வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே இவர் எப்படி வேட்பாளர் அறிவிக்கலாம் என்று கூறி வருகின்றனர். இதனை அடுத்து அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments