இந்தியாவின் வளர்ச்சியை விவசாயிகள் தடுக்கின்றனர். வேலூர் ஆட்சியர் பேச்சால் அதிர்ச்சி

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (04:03 IST)
சமீபத்தில் நெடுவாசல் உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மீத்தேன் என்ற ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த திட்டத்தால் விளைநிலங்கள் பாழாகும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.


 


இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஹைட்ரோகார்பன் பணிகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் கூறிய ஆட்சியர் ராமன், 'இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு வதந்திகளை கிளப்பிவருவதாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தின் உண்மைத்தன்மை தெரியாமல், அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தொடர்ந்து அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வீண் முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிவித்தார்.

ஆட்சியர் ராமனின் அலட்சிய பேச்சு, விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments