Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலை தகர்க்க ஐ.எஸ். தீவிரவாதிகள் சதியா? பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (23:09 IST)
உலக அதிசயங்களுள் ஒன்றானதாகவும், இந்தியாவின் முக்கிய சுற்றுலா பகுதியுமான ஆக்ராவில் உள்ள  தாஜ்மஹாலை தகர்க்க ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உளவுத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவதுள்ளது.



 


சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்து மத ஆதரவு கட்சியான பாஜக வெற்றி பெற்றுள்ளதால் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாஜ்மஹாலை தகர்க்க சதி செய்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தாஜ்மஹாலுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தாஜ்மஹாலின் முக்கியமான இடங்களில் SWAT எனப்படும் கமாண்டாக்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உ.பி மாநிலத்தின் ஆக்ராவில் தாஜ்மஹால் அமைந்துள்ள தாஜ்மஹால் 17-ம் நூற்றாண்டில் ஷாஜகானால் கட்டப்பட்டது., இது உலக அதிசயமாக மட்டுமின்றி உலக அளவில் காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இந்த தாஜ்மஹாலுக்கு வருகை தருகின்றனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவி தற்கொலையால் பரபரப்பு.. மாணவர்கள் போராட்டத்தில் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments