Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலை தகர்க்க ஐ.எஸ். தீவிரவாதிகள் சதியா? பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (23:09 IST)
உலக அதிசயங்களுள் ஒன்றானதாகவும், இந்தியாவின் முக்கிய சுற்றுலா பகுதியுமான ஆக்ராவில் உள்ள  தாஜ்மஹாலை தகர்க்க ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உளவுத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவதுள்ளது.



 


சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்து மத ஆதரவு கட்சியான பாஜக வெற்றி பெற்றுள்ளதால் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாஜ்மஹாலை தகர்க்க சதி செய்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தாஜ்மஹாலுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தாஜ்மஹாலின் முக்கியமான இடங்களில் SWAT எனப்படும் கமாண்டாக்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உ.பி மாநிலத்தின் ஆக்ராவில் தாஜ்மஹால் அமைந்துள்ள தாஜ்மஹால் 17-ம் நூற்றாண்டில் ஷாஜகானால் கட்டப்பட்டது., இது உலக அதிசயமாக மட்டுமின்றி உலக அளவில் காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இந்த தாஜ்மஹாலுக்கு வருகை தருகின்றனர்.

 

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments