Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் பிரியாணி கடை சீல் வைத்த விவகாரம்: கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (12:40 IST)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் அது என்றும், உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கேட்டு கொண்டுள்ளார்.
 
பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்தனர் என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே, அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது என்றும், தங்கள் தவறை உணர்ந்து, உணவகம் சார்பில் கடிதம் அளித்ததால், அன்று மாலையே உணவகம் திறக்கப்பட்டது என்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்,.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments