Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேல் யாத்திரைக்காக மேடை அமைக்க முயற்சி: பாஜகவினர் - போலீசார் இடையே வாக்குவாதம்!

வேல் யாத்திரைக்காக மேடை அமைக்க முயற்சி: பாஜகவினர் - போலீசார் இடையே வாக்குவாதம்!
, வியாழன், 5 நவம்பர் 2020 (18:45 IST)
நாளை பாஜகவினர் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்த யாத்திரைக்காக மேடை அமைக்க முயற்சி செய்யப்பட்டதை அடுத்து திருத்தணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த பாஜகவினர் திட்டமிட்டனர். இந்த யாத்திரை நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாத்திரை தொடங்கும் இடமான திருத்தணியில் வேல் யாத்திரைக்கான மேடைகளை அமைக்க பாஜகவினர் முயன்றனர் 
 
அப்போது அங்கு வந்த போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்திய நிலையில் பாஜகவினர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பாஜகவினரை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பத்தூரில் கால்வாயில் மிதந்த 500 ரூபாய் நோட்டுகள்!