Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடும் போக்குவரத்து நெரிசல்: சென்னையில் வாகன தணிக்கை தீவிரம்!

கடும் போக்குவரத்து நெரிசல்: சென்னையில் வாகன தணிக்கை தீவிரம்!
, செவ்வாய், 18 மே 2021 (11:41 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் ஊரடங்கு உத்தரவுக்கு பின் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்யவும் மாவட்டங்களுக்குள் பயணம் செய்யவும் இ-பதிவு அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒரு இணையதள முகவரியையும் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த இணையதள முகவரியில் பதிவு செய்துவிட்டு முக்கிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டத்திற்கு வெளியேயும், மாவட்டத்திற்கு உள்ளேயேயும் பயணம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து  சென்னையில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இ பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது எனவே சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறான செய்தி போடாதீங்க.. அச்சுறுத்தமால் விழிப்புணர்வு கொடுங்கள்! – ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!