Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி ரூ.120; காய்கறிகள் விலை 10 முதல் 15% உயர்வு!!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (10:41 IST)
மழை காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை 10 முதல் 15% உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. தக்காளி மட்டுமின்றி வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 
 
தக்காளி ஒரு கிலோ ரூ.80 - ரூ.100 ஆக நேற்று இருந்த நிலையில் இன்று ரூ,120 ஆக உயர்ந்துள்ளது. இதே போல ஒரு கிலோ வெங்காயம் ரூ.40, கத்தரிக்காய் ரூ.60. வெண்டைக்காய் ரூ.60, பீன்ஸ் ரூ.45, அவரைக்காய் ரூ.60, கேரட் ரூ.55, பீட்ரூட் ரூ.40, செளசெள ரூ.25, நூக்கல் ரூ.50, முட்டைகோஸ் ரூ.20, உருளைகிழங்கு ரூ.25 ஆக உள்ளது. 
 
இந்த விலை அனைத்தும் நேற்றையை விலையை விட 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments