Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (09:15 IST)
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகளின் விலை உச்சத்திற்கு சென்றதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது 
 
ஒரு காளிபிளவர் நாற்பது ரூபாய் என்றும் ஒரு முட்டைகோஸ் ஐம்பது ரூபாய் என்றும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய் என்று விற்பனை ஆகி வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
காய்கறி விலை ஏற்றம் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரம் மந்தமாக இருப்பதாகவும் மக்கள் காய்கறி விலையைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே பெட்ரோல், டீசல் சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான காய்கறிக விலையும் உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments