Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (09:08 IST)
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஏரி, கடலூர் மாவட்டத்தின் குடிநீர் தேவையை மட்டுமின்றி சென்னை குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக வீராணம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் சென்னைக்கு தினமும் இந்த ஏரியில் இருந்து குடிநீருக்காக சப்ளை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்த தற்போது சிறிய குளம்போல் இருப்பதால் வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் இன்றுடன் நிறுத்தப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வெறும் 39 அடி மட்டுமே இருப்பதால் சென்னைக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் இன்னொரு ஏரியான சோழவரம் ஏரியில் இந்த வருட கோடைகாலத்தை சமாளிக்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளதால் சென்னையின் குடிநீர் தேவை ஓரளவு சமாளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments