Publish Date: Wed, 05 Jan 2022 (11:14 IST)
Updated Date: Wed, 05 Jan 2022 (11:16 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்கும் அரசாணை பிறப்பித்தார்
இந்த அரசாணையை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வேதா இல்லத்தை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது
இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது இதனையடுத்து வேதா இல்லம் தீபா மற்றும் தீபக் உரிமையானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.