Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 பேருக்கு விருது: திருமாவளவன் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 பேருக்கு விருது: திருமாவளவன் அறிவிப்பு
, சனி, 4 ஜூன் 2016 (18:47 IST)
அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் ஆண்டு விழாவை முன்னிட்டு 6 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.


 

 
 
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடத்தபட இருந்த இந்த விழா சட்டசபை தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த விருது வழக்கும் விழா தற்போது வருகிற ஜூன் 21ஆம் தேதி மாலை நடைப்பெறவுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தகுதிவாய்ந்த சான்றோர்களுக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் அதிர், காயிதேமில்லத் பிறை, அயோத்திதாசர் ஆதவன், செம்மொழி ஞாயிறு என்னும் 6 விருதுகள் வழங்கப்படும்.
 
இந்த ஆண்டு விருது பெறுவொரின் பெயர்கள்:-
 
அம்பேத்கர் சுடர் - கே.சந்துரு 
பெரியார் ஒளி - முனைவர் கே.வசந்திதேவி
காமராசர் அதிர் - எல். இளையபெருமாள்
காயிதேமில்லத் பிறை - நாகூர் ஹனிஃபா
அயோத்திதாசர் ஆதவன் - பத்திரிக்கையாளர் ஞாநி
செம்மொழி ஞாயிறு - ஈரோடு தமிழன்பன், என்றார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டவிரோத சிறுநீரக விற்பனை: சர்ச்சையில் அப்பல்லோ மருத்துவமனை