Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்டவிரோத சிறுநீரக விற்பனை: சர்ச்சையில் அப்பல்லோ மருத்துவமனை

சட்டவிரோத சிறுநீரக விற்பனை: சர்ச்சையில் அப்பல்லோ மருத்துவமனை
, சனி, 4 ஜூன் 2016 (18:42 IST)
தில்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் நடப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

 
குறைந்தபட்சம் ஐந்து பேராவது அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து தங்கள் சொந்த சிறுநீரகங்களை சுமார் 6,000 டாலர்களுக்கு விற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
 
இது இந்தியாவில் சட்ட விரோதம் என்பதால், போலி ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதை வைத்து தங்கள் உறவினர்களுக்கு சிறுநீரகங்களை தானம் செய்வதாக மருத்துவர்களை திசை திருப்பிவிடுகிறார்கள்.
 
webdunia

 
இதுவரை குறைந்தது ஐந்து பேர் வரை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், இரு மூத்த மருத்துவர்களின் உதவியாளர்களும் அடங்குவர்.
 
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், இது பெரும் கவலையளிப்பதாகவும், தேவையான தகவல்களை காவல் துறைக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியை யாரும் ’நூறாண்டு வாழ்க’ என்று வாழ்த்த வேண்டாம் - போட்டு தாக்கும் வைரமுத்து