Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருண் காந்தியை கைவிட்ட பாஜக.. காங்கிரஸ் அழைப்பு விடுப்பதாக தகவல்..!

Mahendran
வியாழன், 28 மார்ச் 2024 (14:02 IST)
வருண் காந்தியின் அம்மா மேனகா காந்திக்கு  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த பாஜக, வருண் காந்திக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில் வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஆனால் வருண் காந்தியிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில் மீண்டும் போட்டியிட வருண் காந்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் போட்டியிட்ட பிலிபித் என்ற தொகுதியில் அவருக்கு பதிலாக வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது போல் தனது தாய்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்றும் அதனால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடலாம் என்று வருண் காந்தி திட்டமிட்ட நிலையில் , அவரது தாய் மேனகா காந்திக்கு வாய்ப்பளித்ததன் மூலம் வருண் காந்தி தற்போது அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வருண் காந்திக்கு காங்கிரஸ் தலைப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் காங்கிரஸ் சென்றால் மேனகா காந்திக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்படும் என்பதால் அவர் மௌனம் காப்பதாகவும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு!

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments