Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடாது துரத்தும் வர்தா: தருமபுரி அருகே நிலைக்கொண்டுள்ளது!!

விடாது துரத்தும் வர்தா: தருமபுரி அருகே நிலைக்கொண்டுள்ளது!!
, புதன், 14 டிசம்பர் 2016 (10:14 IST)
வர்தா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 
 
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் சென்னையை சூறையாடியது. பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. இதனால் பலத்த காற்று வீசியது.
 
சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் 192 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய வர்தா புயல் நேற்று மாலை 6.30 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்து.
 
மேலும், மேற்கு நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் வழியாக செல்லும் போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. 
 
இது தற்போது, தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதையடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர்