Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீசில் சரணடைவேன் என்றதால் மதனை தங்க வைத்தேன் : வர்ஷா வாக்குமூலம்

போலீசில் சரணடைவேன் என்றதால் மதனை தங்க வைத்தேன் : வர்ஷா வாக்குமூலம்
, புதன், 23 நவம்பர் 2016 (14:21 IST)
6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன், நேற்று திருப்பூரில் வர்ஷா என்ற பெண்ணின் வீட்டில் இருந்த ரகசிய அறையில் பதுங்கியிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். 


 

 
வர்ஷா நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த அவர், சினிமாவில் சில நடிகைகளுக்கு ஆடை அலங்காரமும் செய்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற அவர், திருப்புரில் ஒரு ஆடை வடிவமைப்பு கடையும் நடத்தி வந்தார். மாதம் ரூ.25 ஆயிரம் வாடகையில் ஒரு தனி பங்களா எடுத்து அவர் வசித்து வந்தார். 
 
அந்த வீட்டில் மதனுக்கு என ஒரு ரகசிய அறை அமைத்து, அவரை தங்க வைத்துள்ளார். மதன் அங்கு பதுங்கியிருந்த போதுதான் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். போலீசாரின் விசாரணைக்கு பயந்து, வர்ஷா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில், போலீசாரிடம் வர்ஷா அளித்த வாக்குமூலத்தில் போது “ மதனின் 2வது மனைவி எனக்கு உறவினர். அதனாலேயே மதனுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் போலீசாரிடம் விரைவில் சரண் அடையப் போகிறேன் என்று என்னிடம் கூறினார். அதனாலேயே அவரை என்னுடைய வீட்டில் தங்க வைத்தேன். மற்றபடி, மதனின் மோசடி நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் நான் துணை போகவில்லை”  என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தியை காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் - பெண் தொண்டர் பரபரப்பு பேட்டி