Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்தா புயல் எதிரொலி - இன்றும் கனமழை பெய்யும்

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (09:07 IST)
வர்தா புயல் நேற்று கரையைக் கடந்து விட்டாலும், இன்றும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
சென்னைக்கு கிழக்கே 140 கி.மீ. தூரத்தில் வங்க கடலில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் மணிக்கு நேற்று சென்னையை கடுமையாக தாக்கியது.
 
இதனால் சென்னையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக 192 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால், 1000க்கும் மேற்பட்ட மரங்கள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து சாலையில் விழுந்தன. சாலைகள் முழுவதும்  மரக்கிளைகள் மற்றும் குப்பைகளாக காட்சியளிக்கிறது. 
 
இந்நிலையில், புயல் கரையைக் கடந்தாலும், இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது:
 
“வர்தா புயல் நேற்று சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்த போது, 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. புயலில் மையப்பகுதி 2.45 மணி முதல் 5 மணி வரை கடந்தது. அதன் பின் அது மேற்கு நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் நோக்கி சென்றுவிட்டது. அப்போது 75 முதல் 85 கி.மீ வரை காற்றின் வேகம் இருந்தது.
 
புயல் கரையைக் கடந்து விட்டாலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும்.  ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதன்பின் படிப்படியாக மழை குறையும்” என்று அவர் தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments