Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (20:45 IST)
வர்தா புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 

 
வர்தா புயல் இன்று மாலை கரையை கடந்தது. இதனால் காலை முதல் பலத்த மழை பெய்தது. அதோடு சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
 
சென்னையில் அதிகபட்சமாக 192 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வர்தா புயலால் சென்னை உள்ள சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
 
தற்போது போர்கால அடிப்படையில் சாலையில் உள்ள மரங்கள் மற்றும் விழுந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இரவு 9 மணிக்குள் சென்னை நகர் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்களின் இயல்பு வாழ்க்கை இன்று பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆக்கிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments