Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்தா புயலுக்கு நிவாரணம் ரூ.500 கோடி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (19:59 IST)
வர்தா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


 

 
வக்கக்கடலில் தீவிரமாக நிலைக்கொண்டிருந்த வர்தா புயல் கடந்த 12ஆம் தேதி சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகள் முழுவதும் மின்சாரம் விநியோகிக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
 
வர்தா புயல் காரணமாக வீசிய சுறைக்காற்றால் சென்னை சாலைகளில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 
 
வர்தா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு என ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.350 கோடியும், சென்னை மாந்கராட்சிக்கு ரூ.75 கோடியும், நெடுஞ்சாலை துறைக்கு ரூ.25 கோடியும், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் புகார் தந்தால் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை! - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

இறந்துவிட்டார் என சான்றிதழ் கொடுத்த டாக்டர்.. இறுதிச்சடங்கின்போது திடீரென எழுந்ததால் பரபரப்பு..!

ஜெருசலத்தில் உள்ள தூதரகம் மூடப்படும்: அமெரிக்க வெளியுறவுத்துறை அதிரடி அறிவிப்பு..!

விமான விபத்து நடந்த இடத்தில் குவிந்து கிடந்த நகைகள், பணம்.. மீட்பு பணியாளரின் நெகிழ்ச்சியான பதிவு..!

பள்ளி சிறுமிகளை ஆடையை கழட்ட சொல்லி ஆபாச புகைப்படம்.. உசிலம்பட்டியில் இருவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments