Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைலியுடன் வர தடை விதித்த விஏஓ மீது நடவடிக்கை: தஞ்சாவூரில் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (12:00 IST)
விஏஓ அலுவலகத்திற்கு வருபவர்கள் கைலியுடன் வரக்கூடாது என தடை விதித்த விஏஓ இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி என்ற  பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கரிகாலன். விமானப்படையில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவர் விஏஓ அலுவலகத்திற்கு வருபவர்கள் கைலி, கால் சட்டை, நைட்டி அணீந்து வரக்கூடாது என்று பெயர் பலகை ஒட்டி வைத்திருந்தார். 
 
இந்த நிலையில் மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விவசாயி ஒருவர் கைலியுடன் வந்ததால் அவர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து கரிகாலனை இடமாற்றம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தஞ்சாவூர் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments