Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடியா இறுதி விசாரணைக்கு போகலாம்! இபிஸ்-ஓபிஎஸ் ஒப்புதல்! – இறுதி விசாரணை எப்போது?

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (11:34 IST)
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என அளிக்கப்பட்ட தீர்ப்பு எதிரான மேல்முறையீட்டில் நேரடியாக இறுதி விசாரணைக்கு செல்ல இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வந்த நிலையில் கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்ததுடன், ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தது. தனி நீதிபதியின் இந்த தீர்ப்பிற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீடு இன்று விசாரிக்க இருந்த நிலையில் நேரடியாக இறுதி விசாரணை நடத்துவது குறித்து இரு தரப்பிடமும் ஆலோசிக்கப்பட்டது. நேரடி இறுதி விசாரணைக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட நிலையில், இரு தரப்புகளும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டின் இறுதி விசாரணை ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments