Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரம்; சூர்யா மீது வழக்கு தொடர்ந்த வன்னியர் சங்கம்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:46 IST)
ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரத்தில் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வன்னியர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் படத்தில் இடம்பெற்றிருந்த கருத்துகள் குறித்த தனது வருத்தங்களை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments