Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் மழைக்கே அஸ்தமித்த தலைநகரம், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? வானதி சீனிவாசன்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (14:51 IST)
ஒரு நாள் மழைக்கே தலைநகரம் சென்னை அஸ்தமித்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து உள்ள நிலையில் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி 
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இனி அடுத்த மழைக்கு தண்ணீர் தேங்காத அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டது. 
 
ஆனால் நேற்று இரவு பெய்த மழை காரணமாக பல இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கோவை தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இது குறித்து கூறிய போது ’ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள், நீரில் மூழ்கிய வாகனங்கள், அஸ்தமித்த தலைநகரம் ஆகியவைகளை பார்க்க முடிகிறது .இரண்டு ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா? விடியல் ஆட்சி என பெருமை பேசும் முதல்வர் இதற்கு பதில் சொல்வாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments