Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலங்குகளுக்கும் பரவிய கொரோனா !வண்டலூர் உயிரியல் பூங்காவில் கண்காணிப்பு தீவிரம் !

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (09:00 IST)
அமெரிக்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபப்ட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள வன உயிரியல் பூங்காவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசால் இதுவரை 82000 பேர் வரை உயிரிழந்தனர், இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமே இதுவரைத் தாக்கி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள பிராக்சன் என்ற உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயது புலிக்கு திடீரென கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. 

இந்த தகவலால் உலகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வன உயிரியல் பூங்காக்களில் உள்ள புலி, சிங்கம் மற்றும் மரநாய் ஆகியவற்றையும் 24 மணிநேரமும் கண்காணிக்க சொல்லி மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

இதன் படி தமிழகத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் கண்காணிப்புப் பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள  2600 விலங்குகளில் . 25 பெரிய புலிகள், 6 புலிக்குட்டிகள் மற்றும் 17 சிங்கங்கள் உள்ளன. மத்திய அரசின் அறிவுரையின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பூங்கா இயக்குனர் யோகேஷ் சிங் தெரிவித்தார்.

விலங்குகளுக்குக் கொடுக்கப்படும் இறைச்சிகள் சோதனை செய்த பின்னரே வழங்கப்படுவதாகவும் பூங்கா தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments