Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (08:24 IST)
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரியங்கா உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு முன் கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட தகவலை அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் முதலில் பார்த்து போலீசாருக்கு புகார் அளித்ததாகவும், இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments