Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மை அடிப்பதை நிறுத்துங்கள் - வைரமுத்து கோரிக்கை

Advertiesment
Vairamuthu
, புதன், 16 நவம்பர் 2016 (15:19 IST)
தலைக்கும், கைக்கும் கருப்பு மை இடுவதை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நோட்டுகளை பெற மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றார்கள்.
 
இதில், சிலர் மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு வந்து பணம் எடுப்பதை தடுக்க, பணம் எடுப்பவர்களின் கையில் மை வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. டெல்லியில்  இந்த முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. 
 
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில்  “ கறுப்பை வெள்ளையாக்கக் கவலைப்படும் தேசத்தில் வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்? 'மை' அடிப்பதை நிறுத்துங்கள் தலையிலும் விரலிலும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மாதத்தில் 3 கோடி ஸ்மார்ட்போன்கள்!!