Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு தீ வைப்போம்: வைகோ ஆவேசம்

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (08:34 IST)
புதிய கல்விக்கொள்கை குறித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தெருவுக்கு தெரு நாற்சந்தி, முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.
 
நேற்று கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட வைகோ, 'அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள் இந்த திராவிடர் இயக்கத்தினர் என்றும், அதைபோல் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு நாற்சந்தி முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என்றும் சூளுரைத்தார்.
 
கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையை திருத்திவிட்டதாக மத்திய அரசு கூறுவதாகவும், ஆனால் அது அப்பட்டமான ஏமாற்று வேலை என்றும், மும்மொழித் திட்டம் என்று அந்த வரைவு அறிக்கையில் இன்னமும் இருப்பதை பார்த்து தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டோம் என்றும் கூறினார்.
 
இந்திய ராணுவத்தின் முன் மார்பை காட்டி உயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை வீண்போகும்படி விட மாட்டோம்' என்றும், திராவிடக் கட்சிகளோடு மோதி பா.ஜ.கவின் மூக்கு உடைபட்டுள்ளது என்றும் வைகோ பேசினார்

தொடர்புடைய செய்திகள்

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments