”நாசக்கார திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்,இல்லையென்றால்”.. வெடிக்கும் வைகோ

Arun Prasath
வியாழன், 3 அக்டோபர் 2019 (10:49 IST)
காவிரி படுகையில் செயல்படுத்தபடவுள்ள ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய நாசக்கார திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்  என வைகோ எச்சரித்துள்ளார்

காவிரி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்கள், செயல்படுத்தப்படவுள்ள நிலையில், தமிழக அளவில் பல அமைப்புகள் அத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது போன்ற நாசக்கார திட்டங்களை கொண்டுவர மத்திய அரசு முனைந்தால் போராட்டம் வெடிக்கும் என வைகோ எச்சரித்துள்ளார்.

முன்னதாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை போதுமளவுக்கு எதிர்க்காமல், காங்கிரஸ் தான் இதற்கு காரணம் என மாநிலங்களவையில் பேசிய வைகோவிற்கு, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களுக்கு எதிராக பல மேடைகளில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த திட்டங்களை குறித்து மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments