Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயசூரியனில் போட்டியில்லை – வைகோ திட்டவட்டம் !

உதயசூரியனில் போட்டியில்லை – வைகோ திட்டவட்டம் !
, வியாழன், 21 மார்ச் 2019 (13:51 IST)
திமுக தொகுதியில் ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனிச்சின்னத்தில்தான் போட்டி என வைகோ அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடபெறுள்ள மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மதிமுக மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 2009ல் ஈரோடு எம்.பியாக தேர்ந்த்டுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேப் போல மாநிலங்களவை சீட் வைகோவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் திமுக மக்களவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தது. அதற்கு மதிமுக தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வமானப் பதில் எதுவும் அளிக்கப்படவில்லை. இதே போன்றதொரு அழுத்தத்தையே விசிகவுக்கும் கொடுத்தது திமுக. அதனால் விசிக இரண்டு தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியனிலும் மற்றொன்றில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேப் போல மதிமுகவும் உதயசூரியன் சின்னதில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத வகையில் ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி அவர்கள், தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார்’ என வைகோ அறிவித்துள்ளார். கட்சியினருடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவை வைகோ எடுத்துள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகிழ்ச்சியாக இருக்க ஐந்து வழிகள்