Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க. எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் மட்டும் வளர முடியாது: வைகோ

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (16:09 IST)
பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் மட்டும் வளர முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்
 
திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்
 
அப்போது நல்லக்கண்ணு பெருமை குறித்து பேசிய அவர் பாஜக குறித்து தனது கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தார்
 
திமுக மீதான தோள் கொடுக்கும் தோழமை தொடர்ந்து வளரும் என்றும் பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தோழமை கட்சிகள் ஒன்றாக இணைந்து எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் இந்த ஒற்றுமையை பலப்படுத்தினால் தமிழகத்தில் பாஜக தலையெடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக தலை காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்றும் ஆலயம் குறித்து பேசுகிறார்கள் என்றும் ஆலயங்கள் நமக்கு விரோதிகள் அல்ல என்றாலும் பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments