Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேமுதிகவின் தோல்விக்கு வைகோவே காரணம் : ஹெச். ராஜா அதிரடி பேட்டி

தேமுதிகவின் தோல்விக்கு வைகோவே காரணம் : ஹெச். ராஜா அதிரடி பேட்டி
, திங்கள், 11 ஜூலை 2016 (20:19 IST)
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சந்தித்த பின்னடைவுக்கு, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவே காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஹெச். ராஜா இன்று மதுரை சென்றிருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது : 
 
“நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மோசமான பின்னடைவைச் சந்திப்பதற்கு வைகோவே செயல்பாடுகள்தான் காரணம்.  அதுதான் தோல்விக்கு வழிவகுத்தது. 
 
வருகிற உள்ளாட்சி தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடும்.  அதேபோல், வருகிற பொங்கல் திருநாளில், கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும். மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் தரமான கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் பாதுகாப்பின்மைக்கு குழந்தை வளர்ப்பு முறைதான் காரணம்: கிரண் பேடி