Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீக்குளித்த வைகோவின் உறவினர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (13:50 IST)
மீம்ஸ்களால் மனமுடைந்து தீக்குளித்த வைகோவின் உறவினரான சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமூக வலைதளங்களில் வைகோ ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ ஆலையினரிடம் பணம் வாங்குவதற்காக தான் இந்த போராட்டத்தை நடத்துகிறார் என்று மீம்ஸ் வெளியானது. இதனால் மனமுடைந்த வைகோவின் மருமகன் சரவணன் சுரேஷ், வைகோவிடம் சென்று பல ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் உங்களைப் பற்றி அவதூறு பரப்பி மீம்ஸ் வெளியிடுகிறார்கள் என வேதனையோடு தெரிவித்துள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றுள்ளார் வைகோ.
 
இதனையடுத்து சரவணன்  சுரேஷ் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 100% சதவீதம் தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது இந்த முடிவிற்கு நாம் தமிழர் கட்சியினர் போட்ட மீம்ஸ்களை மனம் உடைந்தே என் உறவினர் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டான் என வைகோ கூறினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments