Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ கூட்டணியை உடைக்கக்கூடாது – அமைதியாக போன கே.எஸ்.அழகிரி

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (18:21 IST)
வைகோ- கே.எஸ்.அழகிரி இடையே கடும் வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி

“வைகோவிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பகையும் இல்லை. அவரது பேச்சின் மீது எனக்கு எப்போதும் தனி விருப்பம் உண்டு.

வைகோவை தமிழரே இல்லை என்று சீமான் பேசியபோது அதை எதிர்த்தவன் நான். காஷ்மீர் விவகாரத்தை பற்றி பேச ஒதுக்கிய நேரத்தில் காங்கிரஸை குறித்து வைகோ பேசியது ஏன்?

இன்று காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பதர்கு முக்கிய காரணம் நேரு. ஆனால் வைகோ மோடியை புகழ்ந்து பேசுகிறார். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் என்ன தவறு செய்தது என்று வைகோ கூறினால் நான் பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.

ஸ்டாலின் உருவாக்கிய இந்த அற்புதமான கூட்டணியை வைகோ உடைத்துவிடக்கூடாது” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால் வைகோ- கே.எஸ். அழகிரி பிரச்சினையில் மெல்ல அமைதிநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுடைய இரு கூட்டணி கட்சிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில் திமுக இதுகுறித்து எதுவும் பேசாமல் இருப்பது அரசியல் ஆர்வலர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments