Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் தீவிரவாதி வைகோ ஒழிக: பாஜகவினர் கோஷத்தால் பரபரப்பு

பாகிஸ்தான் தீவிரவாதி வைகோ ஒழிக: பாஜகவினர் கோஷத்தால் பரபரப்பு
, சனி, 2 மார்ச் 2019 (06:42 IST)
நேற்று பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்திருந்தபோது கருப்புக்கொடி காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டார். ஒவ்வொரு முறை பிரதமர் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ள வைகோதான், கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது முதல் நபராக பாஜக கூட்டணியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டிய வைகோவுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருடைய வேன் மீது கல்லெறி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மதிமுக, பாஜகவினர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது
 
webdunia
இந்த நிலையில் வைகோவுக்கு எதிராக பாஜக தொண்டர்கல் கோஷமிட்டனர். முதலில் வைகோ ஒழிக என்ற கோஷமிட்ட அவர்கள் ஒரு கட்டத்தில் 'பாகிஸ்தான் தீவிரவாதி வைகோ' என்று கோஷமிட்டதால் பரபரப்பு அதிகரித்தது. அதன்பின் போலீசார் இருதரப்பினர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
 
வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்னும் பலமுறை பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. வரும் 6ஆம் தேதி கூட சென்னை வருகிறார். ஒவ்வொரு முறையும் வைகோ கருப்புக்கொடி காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபிநந்தன் விடுதலை: பிரபல தலைவர்கள் வாழ்த்து