Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..!

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (15:07 IST)
மதுரை சித்திரைத் திருவிழா சமீபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இதில் முக்கிய நாளான கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா தொடங்கி தற்போது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து வரும் 23ஆம் தேதி வரை தினமும்  வினாடிக்கு 1000 அடி கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது 
 
இன்றிலிருந்து 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments