Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையானது வடிவேலு காமெடி – வீட்டுக்கு சாப்பிட சென்ற கைதி தப்பித்து ஓட்டம் !

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (16:06 IST)
வடிவேலுவின் மருதமலைக் காமெடி போல காஞ்சிபுரத்தில் ஒரு கைதி தப்பித்துச் சென்றது பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மீது வழிப்பறி, நகைத்திருட்டு என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக் கைதியாக இருந்த அவரை போலீஸார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது வெங்கடேசன், வாலாஜா அடுத்த செங்காட்டில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்று இரவு உணவு சாப்பிட விரும்புவதாக கூறியுள்ளார். அவரை நம்பி காவலர்களும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, இவர்கள் வெளியே இருந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் வீட்டினுள் சென்று பார்க்க அவர் பின்புறமாக தப்பித்துச் சென்றுள்ளார்.

தப்பியோடிய வெங்கடேசனை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் அஜாக்கிரதையாக இருந்த ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பரந்தாமன், எஸ்ஐ சுந்தரபாண்டியன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளார் டிஐஜி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments