Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபந்தம் பாடுவது யார்? மீண்டும் முட்டிக்கொண்ட வடகலை – தென்கலை!

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2023 (10:25 IST)
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் மீண்டும் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் எழுந்துள்ளது.



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சுவாமி வீதி உலா சமயத்தில் பிரபந்தம் பாடுவது நடைமுறை என்றாலும் அதை யார் பாடுவது என்பதில் அடிக்கடி வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் எழுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது சுவாமி உலாவின் போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாட அதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு பிரிவினருக்கிடையே வாக்குவாதம், மோதல் எழுந்தது. உடனடியாக அங்கு வந்த போலீஸார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இருபிரிவினருமே பிரபந்தம் பாட அனுமதி அளிக்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டு சுவாமி உலா போலீசார் பாதுகாப்புடன் நடந்தது. இந்த வடகலை – தென்கலை மோதலால் சுவாமி வீதி உலாவில் சற்று நேரம் பரபரப்பு எழுந்தது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நிமிடம் தாமதமாக வந்ததால் இருண்ட அறையில் பூட்டப்பட்ட பள்ளி மாணவர்.. விசாரணைக்கு உத்தரவு

நாயை துன்புறுத்தவும் கூடாது.. நாய்க்கடி எதிராக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்: நீதிமன்றம்

காசோலை பரிவர்த்தனை இனி மின்னல் வேகத்தில்: சில மணிநேரங்களில் பணம் வரவு வைக்கப்படும்: ரிசர்வ் வங்கி

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பா?

இந்த ஆண்டு இறுதிக்குள் மேட் இன் இந்தியா' சிப்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments