Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்தடுத்து அதிரடி காட்டும் மாவட்டங்கள்... லிஸ்டில் இணைந்த மதுரை!!

அடுத்தடுத்து அதிரடி காட்டும் மாவட்டங்கள்... லிஸ்டில் இணைந்த மதுரை!!
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:31 IST)
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதிகமாக இருந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கூட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம்தோறும் நடத்தப்படுகின்றன. எனினும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரேஷன் கடை, வியாபார நிறுவனங்கள், திரையரங்கு, சூப்பர் மார்க்கெட், கடை வீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் போன்ற 18 பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருவாய் + வரவேற்பு: கேப்பில் அடிக்கும் BSNL!!