Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாரந்தோறும் இரு முறை தடுப்பூசி முகாம்??

வாரந்தோறும் இரு முறை தடுப்பூசி முகாம்??
, புதன், 17 நவம்பர் 2021 (09:06 IST)
வாரந்தோறும் இருமுறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் அவ்வப்போது தமிழக அரசு நடத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட எட்டாம் கட்ட தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது என்பதும் இதில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளை செலுத்துகின்றனர். 
 
இந்நிலையில் ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் இதில் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 
webdunia
இதனிடையே தற்போது வாரந்தோறும் இருமுறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழ்நாட்டில் வாரந்தோறும் இருமுறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதாவது வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதோடு தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சந்தானத்திற்கு எதிராக #சாதிவெறி_சந்தானம்: பின்னணி என்ன?