Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி மரணம்

Advertiesment
Kulandaiswamy
, சனி, 10 டிசம்பர் 2016 (11:14 IST)
முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமி இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85.


 

 
கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையம் எனும் ஊரில் பிறந்த அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்.
 
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்பிற்காக சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷன், பதம் ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை அவர் பெற்றுள்ளார். குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் ஏராளமான கவிதை தொகுப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
 
அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்புக்கு எச்சரிக்கை விடும் அமெரிக்க தொழிலதிபர்கள்!!