Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் முடிந்து சென்னை திரும்ப முன்பதிவில்லா சிறப்பு ரயில்! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (10:03 IST)

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக மதுரை - சென்னை முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

அதன்படி வரும் 18ம் தேதி மாலை 10.45க்கு சென்னையில் புறப்படும் சிறப்பு ரயில் (06061) அன்றைய தினம் மாலை 7.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக 19ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மதுரையில் புறப்படும் சிறப்பு ரயில் (06062) இரவு 12.45 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

 

இந்த சிறப்பு ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments