Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்கச்சக்க கூட்டம்.. இன்றும் சென்னை – திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (09:31 IST)
இன்று மக்களவை தேர்தலுக்காக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் இன்றும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.



இன்று தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த சில நாட்களாகவே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையிலிருந்து திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்பட்டன. எனினும் மக்கள் கூட்டம் இன்று வரை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்னை – திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக மாலை 18.30க்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments