Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்கச்சக்க கூட்டம்.. இன்றும் சென்னை – திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (09:31 IST)
இன்று மக்களவை தேர்தலுக்காக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் இன்றும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.



இன்று தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த சில நாட்களாகவே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையிலிருந்து திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்பட்டன. எனினும் மக்கள் கூட்டம் இன்று வரை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்னை – திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக மாலை 18.30க்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments