Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகனை கொடூரமாக கொலை செய்த மாமனார்

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (07:54 IST)
மகளை அடித்ததால் மாமனார் ஆத்திரத்தில் மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதியை சேர்ந்தவர் குணவேல்(32). இவரது மனைவி சாரதா(28). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் குணவேல் சாரதாவை அடித்துள்ளார்.
 
இதனால் மனமுடைந்த சாரதா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மகளை அடித்ததால் ஆத்திரமடைந்த சாரதாவின் தந்தை தியாகராஜன், மருமகன் குணவேல் வீட்டிற்கு சென்று ஏன் என் மகளை அடித்தாய் என கேட்டுள்ளார்.
 
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குணவேலை சரமாரியாக குத்தினார். கீழே விழுந்த குணராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், படுகொலை செய்யப்பட்ட குணவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய தியாகராஜனை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments